தமிழகத்தில் வருமா முழு ஊரடங்கு? : சுகாதாரத் துறை விளக்கம்
1 min readWill there be a complete curfew in Tamil Nadu? : Health Department Description
7.4.2021
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர், சுகாதாரத் துறை அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, சுகாதாரத்துறை தரப்பில், ‘தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனப் பரவும் செய்தியில் உண்மை இல்லை. தேர்தலுக்குப் பிறகு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவுவது வதந்தியே. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். ஆனால் முழு ஊரடங்கு அறிவிக்கப்படாது. அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்,’ என விளக்கம் அளித்துள்ளது.