திருமணத் தடை விலக சித்திரை விசு பூஜை
1 min read
Chithirai Visu Puja to get rid of marriage ban
சித்திரை விசு ஒரு புனிதமான நாள்.(14-4-2021 புதன்கிழமை) அன்று புண்ணிய தீர்த்தத்தில் நீராடி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யவேண்டும். அன்று வீட்டில் பாயாசம் வைத்து சாமிகும்பிட்டு அக்கம் பக்கத்தாருக்கு கொடுத்து மகிழலாம்.அன்று திருமண தடைக்கு பரிகாரம் செய்ய உகந்தநாள்.
வெகுநாட்களாக திருமணம் தடைபட்டு வரும் ஆண்களும் பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு நல்ல மட்டை உரிக்காத பச்சை தேங்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை தண்ணீரில் கழுவி அதில் ஒன்பது இடங்களில் சந்தனம் குங்குமம் வைத்து பின்னர் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு தூணிலோ அல்லது கதவிலோ கட்டி போட்டுவிட்டு வந்துவிடவேண்டும். அதன்பின் தொடர்ந்து 3 வியாழக்கிழமைகளில் அந்த கோவிலுக்கு சென்று தங்கள் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும். மேலும் செவ்வாய்க்கிழமை கருட தரிசனம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் அந்த 3 வாரத்திற்குள் நல்ல வரண் அமையும்.
-ஆர்.எம். சிவா