May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தனுசு/2021-2022 பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்

1 min read

Dhanusu/ Tamil new year palan kaliyur naranyanan
தனுசு
தனுசு ராசி அன்பர்களே! இந்த பிலவ ஆண்டின் தொடக்தில் உங்கள் ஆட்சி நாயகன் குருபகவான் அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக குரு 3-ம் இடத்தில் இருக்கும் போது உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும்.வேலையில் அதிக கவனமுடன் இருக்க -வும்.அப்படியானால் குருவால் பிற்போக்கான பலன்கள்தான் நடக்குமோ என்று அஞ்ச வேண்டாம். காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. குருவின் பார்வை எந்த இடையூறையும் உடைத்து எறியும். அவர் 14-9-2021 அன்று அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு 2-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான அம்சம். இதனால் இடர்பாடுகள் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும்.மந்தநிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். பிறகு அவர் 13-11-2021 அன்று முழுபெயர்ச்சி அடைந்து 3-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. ஆனால் இந்த காலக்கட்டத்தில் அவரது அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் பணப்புழக்கம் அதிகரிக்கும் தேவை -கள் பூர்த்தி ஆகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். அதன்பிறகு 14-4-2022 அன்று பெயர்ச்சி அடைந்து 4-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவர் மனஉளச்சலையும், உறவினர் வகையில் வீண்பகையையும் உருவாக்குவார்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கிறார் இது சிறப்பான இடம் அல்ல. பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும். இது ஏழரை சனியின் இறுதிகட்டம். இந்த காலக்கட்டத்தில் சனி அதிக பளுவை கொடுத்தாலும், அதற்கான பலனையும் தரதயங்க மாட்டார். மேலும் சனி பகவான் தான் நின்ற ராசியில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அவரது 10-ம் இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். பொன், பொருள் கிடைக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.மேலும் 21-5-2021 முதல் 9-10-2021 வரை சனிபகவான் வக்ரத்தில் உள்ளார். சனிபகவான் வக்கிரம் அடைந்தாலும் அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார். இந்த காலக்கட்டத்தில் சனியின் பலம் சற்று குறையும். அவரால் கெடுபலன்கள் நடக்காது.
ராகு தற்போது 6-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம். அவர் உங்களை தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். காரிய அனுகூலத்தைக் கொடுப்பார். மேலும் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான கும்பத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலமும் நன்மைகள் கிடைக்கும். அவரது பார்வை -யால் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார்.ராகு 21-3-2022 அன்று 5-ம் இடத்திற்கு வருவதால் நன்மைகள் தரமாட்டார். இன்னல்-களையும், இடையூறுகளையும் அவர் தரலாம். மனைவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கலாம்.
கேது தற்போது 12-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இவரால் பொருள் விரையம் ஏற்படலாம். அதற்காக கவலை கொள்ளவேண்டாம். காரணம் கேதுவின் பின்னோக்கிய 7-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 6-இடமான ரிஷபத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதனால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். 21-3-2022 அன்று கேது உங்கள் ராசிக்கு11-ம் இடமான துலாம் ராசிக்கு போகிறார். அவர் நல்ல வளத்தையும் , ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை கொடுப்பார். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலையும் கொடுப்பார். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

குரு அதிசார பலன்கள்
நினைத்த காரியம் நிறைவேறும். தேவையான பொருட்கள் கிடைக்கும். செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு குரு பல்வேறு முன்னேற்றங்களை தருவார். பணப்புழக்கம் சிறப்படையும். பொருளாதாரத்தில் ஒருபடி மேலோங்கலாம். தடைகள் அனைத்தும் விலகும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் வாகன சுகம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் சீரான நிலை இருக்கும். செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.வீண்அலைச்சல் இருக்காது. அப்படியே வெளியூர் பயணம் மேற் கொண்டாலும் அது அனுகூலமான பலனைத்தரும். சிலருக்கு பாராட்டு, விருது போன்றவையும் கிடைக்க வாய்ப்பு உண்டு.
வியாபாரம் செய்வோர் முன்னேற்றம் காண்பர். செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு குருவால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
கலைஞர்களுக்கு பணவரவு இருக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர் பார்த்த பதவி கிடைக்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும்.
மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். கெட்ட மாணவர்களின் சகவாசத்தினால் அலைக் கழிந்தவர்கள் செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு நல்ல புத்தியோடு சிறப்பான நிலைக்கு செல்வர்.
விவசாயிகளுக்கு.பாசிபயறு,நெல்,உளுந்து,துவரை, கொண்டைக் கடலை, மஞ்சள், பழவகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.
பெண்கள் முன்னேற்றம் அடைவர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பு அதிகமாக கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும்.

ஆண்டின் பிற்பகுதி
இந்த காலத்தில் மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும்.எனவே வீண்விவாதங்களை தவிர்க்கவும். அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்- கலாம். பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.
உத்தியோகம் கடந்த காலத்தைவிட வேலைப் பளு அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படலாம். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சிலர் வேலையில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் குருப்பிரீத்தி செய்தால் சிறப்பான பலனை பெறலாம். பெண்கள் வகையில் உதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் உங்கள் ஆற்றல் மேம்படும். வியாபாரம் விஷயமாக வெளியூர் பயணம் சென்று வருவர். பெண்கள் வகையில் அனுகூலம் கிட்டும். மனைவி பெயரில் உள்ள தொழில் சிறப்படையும். அல்லது அவர்கள் கையால் எதையும் ஆரம்பித் -தாலும் அது நல்ல அனுகூலத்தை கொடுக்கும்.
கலைஞர்கள்:புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம்.அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டும். மாணவர்களுக்கு குருவின் பார்வையால் ஆசிரியரின் ஆலோசனை நல்ல வழியை காட்டும். விவசாயம் புதிய சொத்து வாங்கலாம்.
பெண்ககளுக்கு தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பெண் காவலர் -களுக்கு புதிய பதவி தேடி வரும். உடல்நலம் சிறப்படையும்.
பரிகாரம்- குருபகவானுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள். விநாயகரையும், ஆஞ்சநேயûயும் வழிபட்டு வாருங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்து வாருங்கள். கணவரை இழந்த மூதாட்டிகளுக்கும், சன்னியாசிகளுக்கும் இயன்ற உதவிகளை செய்யுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.