May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கடகம் /2021-2022 பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்

1 min read

Kadagam/Tamil new year palan kaliyur narayanan
கடகம்
கடக ராசி அன்பர்களே! இந்த பிலவ ஆண்டு குருபகவான் அதிசாரம் பெற்று 8-ம் இடமான கும்ப ராசியில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. குருபகவான் மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண்விரோதத்தை உருவாக்குவார்.ஆனால் இதனை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே குரு சாதகமற்ற நிலையில் இருக்கிறாரே என்று நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். அவர் 14-9-2021 அன்று அதிசார நிவர்த்தி அடைந்து 7-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் உயர்வான நிலை. அவர் சுப நிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியா -கும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வை தருவார். மற்றும் அவரது 5-ம் இடத்துபார்வையும் சாதகமாக காணப்படுகிறது. இதனால் பொருளாதார வளம் மேம்படும். அவர் 13-11-2021 அன்று முழுபெயர்ச்சி அடைந்து 8-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அதன்பிறகு 14-4-2022 அன்று பெயர்ச்சி அடைந்து 9-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அப்போது குருவால் மனமகிழ்ச்சி அதிகரிக் -கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும்.தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.
தற்போது சனிபகவான் 7-ம் இடமான மகர ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது சனி குடும்பத்தில் பல்வேறு பிரச்சினையை உருவாக்கு -வார். அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம் என்பது பொதுவான பலன்கள். இதைக் கண்டு அஞ்ச வேண்டாம். சனிபகவான் 21-5-2021 முதல் 9-10-2021 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலங்களில் வக்கிரம் அடைந்தாலும் மகர ராசியில்தான் இருக்கிறார். பொதுவாக சனிபகவானால் நன்மைதர இயலாது ஆனால் வக்கிரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்ரத்தில் சிக்கும் போது கெடுபலன்களை தரமாட்டார் மாறக நன்மையே தர ஆயத்தமாவார்.
தற்போது ராகு 11-ம் இடமான ரிஷபத்திதில் இருக்கிறார். இங்கு அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். ராகு 21-3-2022 அன்று உங்கள் ராசிக்கு 10-ம் இடமான மேஷத்திற்கு செல்வது சிறப்பான இடம் இல்லை. அவரால் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம். அவர் பொருள் இழப்பையும், சிறுசிறு உடல் உபாதைகளையும் கொடுப்பார்.
கேது தற்போது 5-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் இல்லை. இந்த இடத்தில் அவர் அரசு வகையில் சிற்சில பிரச்சினை -யை தரலாம். மேலும் திருட்டு பயமும் ஏற்படலாம். பிள்ளைகளால் பிரச்சினையை தரலாம். ஆனால் இதற்காக கவலைகொள்ள தேவை இல்லை காரணம் அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 11-இடமான ரிஷபத்தில் விழுகிறது. இது .சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். இதன்மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். மகிழ்ச்சி இருக்கும்.அவர் 21-3-2022 அன்று 4-ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். அவரால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல்நலம் பாதிப்பு வரலாம். வயிறு பிரச்சினை வரும்.
குரு அதிசார பலன்கள்
பெண்களால் அனுகூலம் கிடைக்கும். வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு உறவினர்கள் வகைகளில் அன்னியோனியம் நிலவும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம்.
உத்தியோகம் உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும்.செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்க பெறுவர்.
வியாபாரம் சிறப்படையும். நஷ்டம் இருக்காது. அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைப்பது அரிது. மேலும் திருட்டு பயமும் ஏற்படலாம். செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு கணினித் தொழில், பத்திரிகை,இரும்பு,அச்சுதொடர்பான தொழில்களும், தரகு, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழில்களும் சிறந்து விளங்கும். வயதால் மூத்த பெண்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவுவார் -கள். அதன் மூலம் வளர்ச்சியை அடையலாம். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தங்கம்,வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
கலைஞர்கள் செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு வசதியுடன் வாழ்வர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவியும், பணமும் கிடைக்கும். பொதுமக்களிடத்தில் நல்ல செல்வாக்கும், பாராட்டும் கிடைக்கும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படித்தால் பலன் கிடைக்கும்.செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு சிறப்பைக் காணலாம். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறலாம்.
விவசாயிகள் நல்ல வளத்தை காணலாம். புதிய சொத்து வாங்கலாம். கால்நடை மூலம் பணப்புழக்கம் இருக்கும். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு.வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் குடும்பத்தோடு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு திருமணம் கைகூடும். கணவரின் அன்பு கிடைக்கும். குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். பிள்ளைகளால் பெருமை காணாலாம். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

ஆண்டின் பிற்பகுதி
பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். கணவன்-மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.பொருள் இழப்பு ஏற்படலாம். உறவினாகள் வகையில் மனக்கிலேசம் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். வீண்விவாதங்களை தவிர்க்கவும். அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும்.
உத்தியோகம் வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.இடமாற்றம் ஏற்படலாம். சிலர் வேலையில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் குருப்பிரீத்தி செய்தால் சிறப்பான பலனை பெறலாம்.
வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். பணவிரயம் ஆகலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம். அதேபோல் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதி -யுறலாம். எனவே அந்த வகையில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் முன்னேற்றம் காண்பர். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது
விவசாயிகள் நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலைத் தரும். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். சிலருக்கு பாதகமான தீர்ப்பு வரலாம். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரனிடம் சமரமாக போகலாம் என்ற நிலையை கையாளலாம்.
பெண்கள் திருப்திகரமாக வாழலாம். குடும்பத் தேவைக்காக அதிகமாக பாடுபட வேண்டிய திருக்கும்.பிள்ளைகளின் நடவடிக்கையில் கண்ணும் கருத்துமாக இருக்கவும்.வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியது இருக்கும். உங்கள் பொறுப்புகளை நீங்களே செய்யவும் உடல்நலம் கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம்.
பரிகாரம்- கேது சாதகமற்ற நிலையில் உள்ளார்கள். காளியின் அருள் கிடைக்க அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள். குறிப்பாக சிவப்பு நிற துணிகளை கொடுத்து வாருங்கள். பெருமாள் கோவிலுக்கு தொடர்ந்து சென்று வாருங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.