May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

மிதுனம்/2021-2022 பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்

1 min read

Midhunam/ Tamil new year palan kaliyur narayanan

மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே! இந்த பிலவ ஆண்டின் தொடக்தில் குரு பகவான் அதிசாரம் பெற்று உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம். மனமகிழ்ச்சி இருக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். இது தவிர குருவின் 9-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருக்கிறது. இதன் மூலமும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் அவர் 14-9-2021 அன்று அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு8-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். அப்போது அவர் மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண்விரோதத்தை உருவாக்குவார். ஆனால் இதனை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். அவர் 13-11-2021 அன்று முழுபெயர்ச்சி அடைந்து 9-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அதன் பிறகு 14-4-2022 அன்று பெயர்ச்சி அடைந்து 10-ம் இடமான மீனராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை.அப்போது குரு பொருள் நஷ்டத்தையும், மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார்.
சனிபகவான் தற்போது 8-ம் இடமான மகர ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. அஷ்டமத்தில் சனியால் எப்படி நன்மை தர முடியும்? இங்கு அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். அக்கம் பக்கத்தினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர்செல்லும் நிலை உருவாகும்.- இவையெல்லாம் அஷ்டமத்து சனியின் பொதுவான பலன்தான். ஆனால் இந்த கெடு பலன்கள் அப்படியே நடக்கும் என்று கவலை கொள்ள வேண்டாம். காரணம் 21-5-2021 முதல் 9-10-2021 வரை சனிபகவான் வகிக்ரத்தில் உள்ளார். இந்த காலக்கட்டத்தில் சனியின் பலம் சற்று குறையும். அவரால் கெடுபலன்கள் நடக்காது.
நிழல் கிரகமான ராகு தற்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சுமாரான நிலைதான். இங்கு அவரால் நற்பலனை தரஇயலாது. பொருள் விரயத்தையும், தூரதேச பயணத்தையும் கொடுப்பார். 21-3-2022 அன்று அவர் இடம் மாறி 11-ம் இடமான மேஷத்திற்கு செல்கிறார். இங்கு அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.
கேது 6-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கி -றார். இது உகந்த இடம். அங்கு அவர் நற்பலனை தருவார். காரிய அனுகூலம் ஏற்படும். மேலும் பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். அவர் 21-3-2022 அன்று 5-ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம் இல்லை. இந்த இடத்தில் அவர் அரசு வகையில் சிற்சில பிரச்சினையை தரலாம். மேலும் திருட்டுபயம் ஏற்படலாம்.ஆனால் கேதுவின் பின்னோக்கிய 7-ம் இடத்துப் பார்வையால் முயற்சிகளில் வெற்றியை தருவார். பொருளாதார வளம் மேம்படும்.

குரு அதிசார பலன்கள்
பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி இடையே அன்பும், பாசமும் நீடிக்கும். செப்டம்பர் 14-ந்தேதிக்கு பிறகு கணவன்-மனைவி ஒருவருக் -கொருவர் பொறுமையாகவும், விட்டுகொடுத்தும் போக வேண்டும். சிலரது வீடுகளில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. மன வேதனையும், நிலையற்ற தன்மைûயும் ஏற்படலாம்.அக்கம் பக்கத்தினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். மன உளச்சல், உறவினர் வகையில் வீண்பகை உருவாகலாம்.
உத்தியோகம் தடைகள், திருப்தியின்மை போன்றவை மறையும். சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய பதவி தேடிவரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு மேல்அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். சிலர் அதிக செலவை சந்திக்க வேண்டியதிருக்கும்
வியாபாரம் பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு புதிய முதலீடு விஷயத்தில் அதிக கவனம் தேவை. யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.
கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தங்களை பெறலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காணலாம். புதிய பதவி தேடி வரும்..
மாணவர்கள் ஆசிரியர்களின் உதவி பயன் உள்ளதாக அமையும். செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.
விவசாயம். பசு மற்றும் கால்நடைகள் வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய சொத்து வாங்கு வதற்கான அனுகூலம் உண்டு. வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு விவசாயத்தில் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலைத் தரும்.
பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பர். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். பெண் காவலர்கள் சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்பு இருக்கிறது. உடல்நலம் செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.

ஆண்டின் பிற்பகுதி
மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். மனைவி வகையில் இருந்து வந்த ஊடல் மறையும். குழந்தைபாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம்.உறவினர்கள் வகைகளில் அன்னியோ- னியம் நிலவும்.
உத்தியோகம் சம்பளஉயர்வு, பதவிஉயர்வுகளில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலர் இடமாற்றம் காண்பீர்கள்.அதுவும் விரும்பிய இடமாக அமையும். உங்கள் திறமை பளிச்சிடும். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்க பெறுவர். வேலையோடு பக்கத் தொழில் செய்பவர்கள் நல்ல வளத்தோடு இருப்பர்.
வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். தங்கம்,வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும், தரகு, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழில்களும் சிறந்து விளங்கும்.
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பட்டம் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சிறப்பான பலனை பெறுவர்.
மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய பாடம் பெறலாம். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம்.
விவசாயிகளுக்கு நெல், மஞ்சள், கடலை, எள், கொள்ளு பனை பொருள் போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். ஆடுகள், கோழி, பசுகள், கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெறலாம். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
பரிகாரம்: சனிக்கிழமை சனிபகவானுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள். செப்டம்பர் 14-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை குரு பகவான் சாதகமாக இல்லை என்பதால் அவருக்கு அர்ச்சனை செய்யலாம். முல்லை மலர் மாலை அணிவித்து வணங்குங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.