May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 13,732 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 13,732 people in a single day in Tamil Nadu today

23.4.2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 13,732 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 13,732 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,51,487ஆக அதிகரித்து உள்ளது. இன்று மட்டும் 1 லட்சத்து 25 ஆயிரத்து 593 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 8,432 பேர் ஆண்கள், 5,344 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 6,34,824 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 4,16,625 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 38 ஆகவும் உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 8,078 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 43 ஆயிரத்து 44 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனாவுக்கு 78 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,395 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 95,048 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.