ஆக்சிஜன் கன்டெயர்னர்களை கொண்டு செல்ல விமானம்
1 min readPlane to carry oxygen containers
13.4.2021
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ஆக்சிஜன் சிலிண்டர்களை துரிதமாக கொண்டு செல்ல, இந்திய விமானப்படை கன்டெய்னர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆக்சிஜன் சிலிண்டர்கள்
இந்தியாவில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இதனையடுத்து, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், விரைவாக கொண்டு செல்லவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக, உற்பத்தியாளர்களுடன் பிரதமர் மோடி இன்று(வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
விமானங்கள் மூலம்
இதனை அடுத்து, ஆக்சிஜனை விரைவாக நிரப்பி, மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல ஏதுவாக, ஆக்சிஜன் நிரப்பும் மையங்களுக்கு கன்டெயர்னர்கள் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக விமானப்படைக்கு சொந்தமான சி-17. ஐஎல்-76 விமானங்கள் ஈடுபட்டுள்ளன.
உத்தரபிரதேசத்தில் இருந்து விமானங்களில், காலியான இரண்டு கிரையோஜெனிக் ஆக்சிஜன் கன்டெய்னர்களும், மற்றொரு ஐஎல்- 76 விமானம் ஒன்றில், காலியான கன்டெயர்னர், மேற்கு வங்காளத்தின் பனகார்க் நகருக்கு எடுத்து செல்லப்பட்டது.
தெலுங்கானாவின் பேகம்பேட்டை விமான நிலையத்தில் இருந்து ஒடிசாவுக்கு ஆக்சிஜன் நிரப்புவதற்காக காலி டேங்கர்களை கொண்ட லாரிகள், இந்திய விமானப்படை விமானங்கள் கொண்டு செல்ல உள்ளன.