April 19, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 34.87 லட்சம் பேருக்கு கொரோனா

1 min read

Corona for 34.87 lakh people in a single day in India

5.5.2021

இந்தியாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை சற்று உயர்ந்து 34 லட்சத்து 87 ஆயிரத்து 229 பதிவாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை, கட்டுக்கடங்காமல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கடந்த 1-ந் தேதி பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டி பதிவானது உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் கடந்த 2-ந் தேதியில் இருந்து தொடர்ந்து பரவல் குறைந்து வந்தது.

2-ந் தேதி 3 லட்சத்து 92 ஆயிரத்து 488 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. 3-ந் தேதி இது 3 லட்சத்து 68 ஆயிரத்து 147 ஆக குறைந்தது. நேற்று (4-ந் தேதி) இது, 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 ஆக பதிவானது.

சற்று கூடியது

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருந்தது. ஆனால், இன்று காலை கொரோனா பதிவு சற்று உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று மட்டும் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 6 லட்சத்து 65 ஆயிரத்து 148 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 439 பேர் ஒரே நாளில் குணம் அடைந்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து 1 கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்து 731- பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று மட்டும் 3,780 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பால் 2 லட்சத்து 26 ஆயிரத்து 188 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தொற்று பாதிப்புடன் 34 லட்சத்து 87 ஆயிரத்து 229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.