தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,875 பேருக்கு கொரோனா
1 min readCorona for 34,875 people in a single day in Tamil Nadu today
19.5.2021
இன்றைய கொரோனா பாதிப்பு பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு;-
34,875 பேருக்கு கொரோனா
34,875பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், 8 பேர், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 33,867பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,99,225 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,56,04,311 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று 23,863பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இது வரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,26,915 ஆக உயர்ந்தது.
365 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18,734 ஆக அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் இன்று 665 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இன்று 8பேர் இறந்துள்ளனர். தென்காசியில் இன்று 427 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தூத்துக்குடிில் 928 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தென்காசி, தூத்துக்குடியில் இன்று தலா ஒருவர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.