இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் அதிகம்
1 min readIn India one day the discharge is more than the corona effect
19.5.2021
இந்தியாவில் 6-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஒரு நாள் கொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணி்க்கை அதிகமானது. நேற்று ஒரே நாளில் ஒரே நாளில் 4,529 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தயாவில் கொரோனா 2-வது அலை தலைவிரித்தாடுகிறது. ஆனாலும் கடந்த 6 நாட்களாக கொரோனா பாதப்பு சற்று குறைந்து வருகிறது. அதே நேரம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. அதேபோல் நேற்று கொரோனா பாதிப்பைவிட் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
4,529 பேர் சாவு
இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாதவகையில் கொரோனாவால் 4,529 பேர் இறந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 83 ஆயிரத்து 248 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 14-ந் தேதியில் இருந்து கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு இறங்குமுகம் கண்டு வருகிறது. இந்த வகையில் இன்று 6-வது நாளாக தொற்று பாதிப்பு சரிவை சந்தித்திருப்பது சற்று பெருமூச்சு விட வைக்கிறது.
இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் நாட்டில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 334 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகினர். இவர்களையும் சேர்த்து நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 54 லட்சத்து 96 ஆயிரத்து 330 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற தரமான சிகிச்சையின் பலனாக நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 851 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.
இதுவரை நாட்டில் 2 கோடியே 19 லட்சத்து 86 ஆயிரத்து 363 பேர் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீள்வதற்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று காலை 32 லட்சத்து 26 ஆயிரத்து 719 ஆக குறைந்துள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 18 கோடியே 58 லட்ச்சத்து 09 ஆயிரத்து 302 பேர் ஆகும்.