May 24, 2024

Seithi Saral

Tamil News Channel

டெல்லி மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விரைவில் கைவிடப்படும்

1 min read

Remtacivir will soon be dropped at a Delhi hospital

19.5.2021
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்து விரைவில் கைவிடப்படும் என்று டெல்லி கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் ராணா தெரிவித்துள்ளார்.

ரெம்டெசிவிர் மருந்து

டெல்லியில் டெல்லி கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் ராணா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “ரெம்டெசிவிர் மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயாளிகளிடம் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ரெம்டெசிவிர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் எந்த மாறுதலையும் ஏற்படுத்தாததால், அதனைக் கைவிட முடிவு செய்துள்ளோம். தற்போது மூன்று மருந்துகள் மட்டுமே கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.” என்றார்.

இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தலின் படி ஏற்கெனவே பிளாஸ்மா சிகிச்சை முறையும் கைவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.