தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியது; 397 பேர் சாவு
1 min readCorona impact in Tamil Nadu exceeds 35,000; 397 deaths
20.5.2021
தமிழகத்தில் இன்று ஒரே நாளில், 35,579 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 397பேர் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 35,579 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், 9 பேர், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 35,570 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,34,804 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,57,75,405 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 19,919 பேர் ஆண்கள், 15,660 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 10,33,741 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 7,01,025ஆகவும் அதிகரித்து உள்ளது. 25, 368 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,52,283 ஆக உயர்ந்தது.
397 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 185 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 212 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,131 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னையில் 6,073, கோவையில் 3,335 பேருக்கும், செங்கல்பட்டில் 2,092 பேருக்கு்ம், ஈரோட்டில் 1,505 பேருக்கும், கன்னியாகுமரியில் 1,096 பேருக்கும், மதுரையில் 1,269 பேருக்கும் திருவள்ளூரில 1,791 பேருக்கும், தூத்துக்குடியில் 1004 பேருக்கும், திருப்பூரில் 1581 பேருக்கும, திருச்சியில் 1375 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
நெல்லையில் 589 பேருக்கும், தென்காசியில் 452 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில் 73 பேரும், செங்கல்பட்டில் 44 பேரும், காஞ்சிபுரத்தி் 27 பேரும் கோவை, திருவள்ளூர் தலா 20பேரும், நெல்லை, தூத்துக்குடியி்ல் தலா 4 பேரும், தென்காசியில் 3 பேரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.