கேரள முதல்வராக பினராயி விஜயன், 2-வது முறையாக பதவி ஏற்பு
1 min readBinarayi Vijayan takes over as Kerala Chief Minister for the 2nd time
20.5.2021
கேரள முதல்-மந்திரியாக பினராயி விஜயன் 2-வது முறையாக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
2-வது முறையாக..
கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை பிடித்தது.
இதனையடுத்து, முதல்வராக பினராயி விஜயன் இன்று(மே.20) பதவி ஏற்று கொண்டார். அவருக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சரவையில், 21 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர். கடந்த முறை அமைச்சர்களாக இருந்த யாருக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. கொரோனா காரணமாக, பதவியேற்பு நிகழ்ச்சியில் 500 பேர் மட்டுமே பங்கேற்றனர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பதவியேற்பு விழா எளிமையாக நடந்தது.
ஸ்டாலின் வாழ்த்து
கேரள முதல்வராக பதவியேற்ற பினராயி விஜயனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அவர் டுவிட்டரில்
“கேரள முதல்வராக பதவியேற்ற எனது சகோதரர் பினராயி விஜயனுக்கு வாழ்த்துகள். அவரது உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி ஆகியவை மக்கள் இடையே சமநிலை, அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.