இந்தியாவில் கொரோனா தொற்று உயிரிழப்பு குறைந்தது; ஒரே நாளில் 2,76,110 பேர் பாதிப்பு
1 min readCorona infection mortality is low in India; 2,76,110 people were affected in a single day
20/5/2021
இந்தியாவில் இன்று காலை பதிவின் படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஒரே நாளில் புதிதாக 2 லட்சத்து 76 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை, மோசமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த சில நாட்காக இந்தியாவில் கொரோனா தொற்று தினசரி 3 லட்சத்துக்கு கீழேதான் பதிவாகி வருகிறது. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்தாலும் உயிரிழப்பு குறையாமல் இருந்தது. இன்றைய பதிவில் இறப்பு எண்ணிக்கை சற்று குறைந்தது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
3,874 பேர் சாவு
அந்த வகையில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் 3,874 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து இருக்கிறார்கள்.
அதற்கு முந்தைய நாளில் கொரோனாவுக்கு 4,529 பேர் இறந்துள்ளனர். ஒரே நாளில் 655 பேர் என்ற அளவில் இறப்பு குறைந்துள்ளது.
இதுவரை நாட்டில் கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 87 ஆயிரத்து 122 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 110 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இதுவரை நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 57 லட்சத்து 72 ஆயிரத்து 400 ஆக உயர்ந்தது.
இன்று ஒரே நாளில் நாடு முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து 3 லட்சத்து 69 ஆயிரத்து 077 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். இதுவரையில் குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 23 லட்சத்து 55 ஆயிரத்து 440 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 31 லட்சத்து 29 ஆயிரத்து 878 ஆக இருந்தது.
இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 18,70,09,792 ஆக உள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி, இந்தியாவில் இதுவரை 32,23,56,187 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 20,55,010 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.