May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

திருமணம் நடத்த வந்த புரோகிதர் மணப்பெண்ணின் தாலி தங்கத்தை திருடினார்

1 min read

The priest who came to perform the wedding stole the bride’s thali gold

20.5.2021

திருமணம் செய்து வைக்க வந்த புரோகிதர் மணப்பெண்ணின் தாலி தங்கத்தை திருடி உள்ளார். அவரை திருமணத்தின் போது எடுத்த வீடியோ காட்டிக் கொடுத்தது.

தாலியில் தங்கமணி

தெலுங்கானா மாநிலம் துப்ரானில் கடந்த 16ந்தேதி ஞானசந்தர் தாஸ்- வசந்தா ஆகியோருக்கு புரோகிதர் ஒருவர் வேத மந்திரங்கள் முழங்க திருமணம் செய்து வைத்தார். அப்போது பெண்ணின் தாலி மற்றும் தாலி செயினில் கோர்க்கக் கூடிய தங்கமணி குண்டுகள் என அனைத்தையும் மண மேடையில்
மஞ்சள், குங்குமம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த புரோகிதர் தங்கமணி குண்டுகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

வீடியோ

தாலியில் தங்கமணிக் குண்டுகள் இல்லாததைக் கண்டு திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். திருமண வீடியோவில் புரோகிதர் தங்கமணி குண்டுகளை தனது பாக்கெட்டில் போடுவது தெளிவாக பதிவாகி இருந்ததை அடுத்து அவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
வீடியோவை ஆதாரமாக வைத்து போலீசார் திருமண மண்டபத்தில் கைவரிசை காட்டிய புரோகிதரை வலைவீசி தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.