இந்தியாவில் ஒரே நாளில் 2.57 லட்சம் பேருக்கு கொரோனா
1 min readCorona for 2.57 lakh people in a single day in India
22.5.2021
இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
தமிகத்தில் கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக மக்களுக்கு சற்று ஆறுதல் வரும் வகையில் நாடு முழுவதிலுமான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
இந்திய கொரோனா நிலவரம் பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 299 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 3 லட்சத்து 57 ஆயிரத்து 630-பேர் குணம் அடைந்துள்ளனர்.
4,194 பேர் சாவு
நேற்று ஒரே நாளில் 4,194 பேர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 62 லட்சத்து 89 ஆயிரத்து 290-ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சத்து 70 ஆயிரத்து 365- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 95 ஆயிரத்து 525- ஆக உள்ளது. தற்போது கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்து 23 ஆயிரத்து 400 ஆக உள்ளது.