அந்தியூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொரோனாவுக்கு பலி
1 min readFive members of the same family were killed in the corona in Anthiyur area
25.5.2021
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடுத்தடுத்து கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மற்றும் 47 வயதுடைய அவரது மனைவி ஆகியோருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவில் கணவன்-மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
ஆனால் அவர்கள் 2 பேரும் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தனர். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆணின் தாய், சித்தப்பா, சித்தி ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். கடந்த 4 நாட்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.