May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும்; முதலமைச்சர் உத்தரவு

1 min read

To distribute essential goods without hindrance; Order of the Chief Minister

25-5-2021

தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக்குப்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

ஊரடங்கில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும்.
காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதையும், நியாயமான விலையில் கிடைப்பதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

நகர்புறத்தை போன்று கிராமப்புறங்களிலும் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் நேன்று ஒரே நாளில் 6,296 வாகனங்கள் மூலம் 4,900 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.