May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 31,079 பேருக்கு கொரோனா; டிஸ்சார்ஜ் 31,255

1 min read

Corona for 31,079 people in Tamil Nadu today; Discharge 31,255

28.5.2021

தமிழகத்தில் இன்று 31,079 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 486 பேர் உயிரிழந்து உள்ளனர். 31,255 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. குறிப்பாக பாதிப்பைவிட குணம் அடைந்து வருவர்களின் எண்ணிக்கை சற்ற அதிகமாகவே உள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 31,079 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,09,700 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 17,504 பேர் ஆண்கள், 13,575 பேர் பெண்கள்.

கொரோனாவில் இருந்து இன்று 31,255 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,74,539 ஆக உயர்ந்தது.

486 பேர் சாவு

486 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,775 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

கோவை

இன்றும் சென்னையை விட கோவையில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னையி் 2,762 பேருக்கும், கோவையி் 3,937 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே நேரம் சென்னையில் இன்று கொரோனாவுக்கு 107 இறந்துள்ளனர். கோயைில் 33பேர் இறந்துள்ளனர்.

நெல்லை

நெல்லையில் இன்று 411 பேருக்கும், தென்காசியி் 398 பேருக்கும், தூத்துக்குடியில் 753 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லையில் இன்று 6 பேரும், தென்காசியில் 2 பேரும், தூத்துக்குடியில் 7 பேரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.