தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
1 min readFull curfew in Tamil Nadu extended for another week
28.5.2021
தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா
இந்தியாவிலேயே தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றை தடுக்க முதலில் இரண்டு வாரங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் கடந்த 24ந் தேதியில் (திங்கட்கிழமை) இருந்து ஒருவாரம் முழு ஊரடங்கு (தளர்வுகள் இல்லாத) அமல்படுத்தப்பட்டது.
தற்போது கொரோனா சற்று குறைந்து வருகிறது. ஆனால் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால் ஊரடங்கை மேலும் நீ்ட்டிக்க வேண்டும் என்று மருத்துவ அறிஞர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலியிடம் கூறினார்கள்.
நீட்டிப்பு
இந்த நிலையில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது வருகிற ஜூன் 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனால் நடமாடும் காய்கறி கடைகள், பழக்கடைகள் அதன்சார்ந்த துறைகள் மூலம் விற்கப்படும் நடைமுறை தொடரும் என அறிவித்துள்ளது.
மளிகைப்பொருட்கள்
கொரோன நிவாரண நிதி ஏற்கனவே 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் மேலும் 2 ஆயிரும் ரூபாயும் 13 மளிகை பொருட்கள் அடங்கிய மளிகை சமான்கள் 3-ந் தேதிக்குள் வழங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.