April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழக கொரோனாவில் கோவை முதலிடம்; தென்காசியில் 19 பேர் சாவு

1 min read

Coimbatore tops in Tamil Nadu Corona; 19 killed in Tenkasi

29.5.2021
தமிழக கொரோனாவில் இன்றும் சென்னையை தாண்டி கோவை முதலிடத்தல் உள்ளது. தென்காசி மாவட்டத்தில் இன்று கொரோனாவுக்கு 19 பேர் இறந்துள்னர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 30,016 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,39,716 ஆக அதிகரித்து உள்ளது..
இன்று 31,759 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,06,298 ஆக உயர்ந்தது.

486 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23,261 ஆக அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

கோவை

சென்னையில் 2705 பேர் என்ற நிலையில் கோவையில் 3692 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 1314, ஈரோட்டில் 1743, சேலத்தல் 1492, திருவள்ளூரில் 1072, திருப்பூரில் 1697, திருச்சியில் 1099 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தென்காசி

நெல்லையில் 416, தென்காசியில் 370, தூத்துக்குடியில் 691 பேருக்கு இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. நெல்லையில் 3 பேரும் தென்காசியில் 19 பேரும் தூத்துக்குடியில் 7 பேரும் இன்று கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.