கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சேத நிவாரணம் அறிவிப்பு
1 min readRain damage relief announcement in Kanyakumari district
29.5.2021
கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு மழை நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன்படி, மழையால் முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும். பகுதியாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4,100 நிவாரணமாக வழங்கப்படும்.
மேலும் இடுபொருள் நிவாரணமாக, மானாவரி, நீர்பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பல்லாண்டு கால பயிர்களுக்கு நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்றும் இடுபொருள் நிவாரணமாக ரூ.20 ஆயிரமும், மானாவாரி பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
==