April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவுக்கு எதிராக போராட அர்த்தமற்ற பேச்சு எந்த வகையிலும் உதவாது; ராகுல் காந்தி விமர்சனம்

1 min read

No sense in telling you now – I don’t wanna ruin the suprise. Rahul Gandhi Review

30.5.2021-

மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியதை ராகுல்காந்தி விமரிசித்துள்ளார். அவர் கொரோனாவுக்கு எதிராக போராட அர்த்தமற்ற பேச்சு எந்த வகையிலும் உதவாது என்று குறிப்பி்ட்டு உள்ளார்.

மோடி பேச்சு

மோடி பிரதமராக பதவியேற்றது முதல், அதாவது கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். மன் கி பாத் என்ற பெயரில் வெளியாகும் இந்த நிகழ்ச்சி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகிறது. நேற்று கடைசி ஞாயற்றுக்கிழமை என்பதால் மோடி காலை 11 மணி ஆல் இந்தியா ரேடியாவில் பேசினார்.

ராகுல் காந்தி விமர்சனம்

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசு கொரோனா தொற்று விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அவ்வப்போது தனது டுவிட்டர் மூலம் தனது விமர்சனங்களை முன் வைத்து வரும் ராகுல் காந்தி, நேற்று பிரதமர் மோடியின் மன் கி பாத் உரையை மறைமுகமாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

அர்த்தமற்ற பேச்சு

ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் “கொரோனாவுக்கு எதிராக போராட சரியான நோக்கம், கொள்கை, உறுதிப்பாடு ஆகியவை தேவை. மாதத்திற்கு ஒரு முறை அர்த்தமற்ற வகையில் பேசுவது எந்த வகையிலும் உதவாது” என்று பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.