கருப்பு பூஞ்சை நோய்க்கு மாத்திரை கண்டுபிடிப்பு
1 min readTable discovery for black fungus
30.5.2021
கருப்பு பூஞ்சை நோய்க்கு மாத்திரையை ஐதராபாத் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கருப்பு பூஞ்சை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை நோயும் பரவி வருகிறது.
குறிப்பாக இந்த நோய் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களை தாக்கக்கூடிய அதிக ஆபத்து உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கட்டுப்பாடு அற்ற நீரழிவு நோயாளிகளுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
மருந்து
மியூக்கர் மைக்கோசிஸ் என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சையில் லிபோசோமல் ஆம்போடெரிசின்-பி என்ற மருந்து செலுத்தப்படுகிறது.
இந்த மருந்து இந்தியாவில் குறைந்த அளவே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அமெரிக்காவில் இருந்து 10 லட்சம் குப்பிகளை மத்திய அரசு இறக்குமதி செய்கிறது.
கண்டுபிடிப்பு
இந்த நிலையில் கருப்பு பூஞ்சை சிகிச்சையில் அளிக்கப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்தை மாத்திரையாக (ஏ.எம்.பி.) ஐதராபாத் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு வேதியியல் பொறியியல் துறையைச் சேர்ந்த சப்தர்ஜி மஜும்தார், சந்திரசேகர்சர்மா ஆகியோர் ஏ.எம்.பி. மருந்தை வாய் வழியாக (மாத்திரை) செலுத்துவது தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தினர். இதில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மாத்திரை உருவாக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-
200 ரூபாய்க்கு
நாட்டில் கருப்பு பூஞ்சை மற்றும் பிற பூஞ்சை நோய்களுக்கு காலாஅசார் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஏ.எம்.பி. மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஏ.எம்.பி. மாத்திரை 60 எம்.ஜி. ரூ.200-க்கு கிடைக்கும்.
பூஞ்சை நோய்க்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளில் கிடைக்கும் தன்மை, மலிவு விலை மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றுக்கு பதிலாக இந்த வாய்வழி மருந்து அவசர மற்றும் உடனடி சோதனைக்கு அனுமதிக்க வேண்டியது அவசியம் என்று நாங்கள் உணருகிறோம்.
2 ஆண்டுகள் நடத்திய ஆய்வின் முன்னேற்றத்துடன் இந்த தொழில்நுட்பத்தை பெரிய அளவிலான உற்பத்திக்கு பார்மா நிறுவனங்களுக்கு வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
வளர்ந்த தொழில்நுட்பம் அறிவுசார் சொத்துகளில் விடுபட்டுள்ளது. இதனால் மாத்திரை பெருமளவில் உற்பத்தி செய்யப்படலாம். மேலும் இது மலிவு விலையிலும் பெருமளவிலும் பொதுமக்களுக்கு கிடைக்கும்.
இது நோயாளிகளுக்கு மிகவும் பயன் அளிக்கும். மெதுவான மற்றும் நிலையான வெளியீட்டினை உறுதி செய்கிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மையை குறைக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.