தமிழகத்தில் 28 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா குறைந்தது
1 min readIn Tamil Nadu the corona is less than 28 thousand
31.5.2021
தமிழகத்தில் நேற்று கொரோனா பதிவு 28 ஆயிரதுக்கும் கீழ் குறைந்தது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் 19 நாட்களாக குறைந்து வருகிறது.
தமிழக கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத்துறை வெளியிட்ட தவல்கள் வருமாவது:-
தமிழகத்தில் இன்று 27,936 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,96,516 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று 31,223 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியனார்க்ள. இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,70,503 ஆக உயர்ந்தது.
478 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 478 பேர் கொரேனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24,232 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையில் இன்று 2596 பேருக்கும் கோவையில் 3308 பேருக்கும் செங்கல்பட்டில் 1138 பேருக்கும் ஈரோட்டில் 1742 பேருக்கும், திருப்பூரில்1373 பேருக்கும், திருச்சியில் 1119 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
நெல்லை
நெல்லையில் இன்று 394 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 2 பேர் இறந்துள்ளனர். தென்காசில் 288 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடியில் 590 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7 பேர் இறந்துள்ளனர்.