தமிழகத்தில் இன்று கொரானா 6,895 பேராக குறைந்தது; 194 பேர் சாவு
1 min readIn Tamil Nadu today the corona is down to 6,895; 194 deaths
22.6.2021
தமிழகத்தில் இன்று 6,895 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளளது. இன்று 194 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் கடந்த 32 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 41 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 6,895 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,36,819 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 3,914 பேர் ஆண்கள், 2,981 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 13,156 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,48,353 ஆக உயர்ந்துள்ளது.
194 பேர் சாவு
194 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,580 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னையில் இன்று 410 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டு உள்ளது. 24 பேர் அங்கு இறந்துள்ளனர். கோவையில் இன்று 870 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 19 பேர் இறந்துள்ளனர்.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அந்த மாவட்டத்தி் 2 பேர் இன்று இறந்துள்ளனர்.
தென்காசியில் இன்று 41 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அந்த மாவட்டத்தி் இன்று இறப்பு இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் 91 பேர் இன்று பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளார்.