அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு;மிசோரம் மாநில அமைச்சர் அறிவிப்பு
1 min readRs 1 lakh prize for those who have more children; Announcement by the Minister of State for Mizoram
22/6/2021
தனது தொகுதியில், அதிக குழந்தைகள் பெற்று கொண்ட பெற்றோருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என மிசோரம் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமவியா அறிவித்துள்ளார்.
மக்கள் தொகை
இந்தியாவில் பல மாநிலங்கள், மக்கள் தொகை கட்டுப்படுத்துவதற்கான கொள்கையை வெளியிட்டு உள்ளன. இந்நிலையில், மிசோர மாநில அமைச்சர் ராபர்ட் ரோமவியா அதிக குழந்தைகளுக்கு பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.
மிசோரம் மாநிலத்தில் உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ராபர்ட் ரோமவியா கூறியதாவது:-
ரூ.1 லட்சம்
எனது தொகுதி, அயிஸ்வால் கிழக்கில், அதிக குழந்தைகள் கொண்ட பெற்றோருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். அவர்களுக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கப்படும். இதற்கு ஆகும் செலவை, எனது மகன் நடத்தும் கட்டுமான நிறுவனம் ஏற்று கொள்ளும். மிசோ மக்களின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் இடையே உள்ள வித்தியாசம் கவலைக்குரியதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.