தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6,162 ஆக குறைவு; 155 பேர் சாவு
1 min readCorona impact in Tamil Nadu drops to 6,162; 155 deaths
24.6.2021
தமிழகத்தில் கடந்த 34 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 43 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 6,162 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,49,577 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 3,517 பேர் ஆண்கள், 2,645 பேர் பெண்கள். இன்று 9,046 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,67,831 ஆக உயர்ந்துள்ளது.
155 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 155 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,901 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.