தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 6,596 பேராக குறைந்தது; 166 பேர் சாவு
1 min readCorona infestation in Tamil Nadu today has dropped to 6,596; 166 deaths
23.6.2021
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 6,596 பேராக குறைந்தது. இன்ற 166 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
குறைந்தது கொரோனா
தமிழகத்தில்கடந்த 33 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 42 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இது தொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் கூறியதாவது:-
தமிழகத்தில் இன்று 6,596 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,43,415 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 3,709 பேர் ஆண்கள், 2,887 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 10,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,58,785 ஆக உயர்ந்துள்ளது.
166 பேர் சாவு
இன்று கொரோனாவுக்க 166பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,746 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையில் இன்று 396 பேருக்க கொரோனா உறுதி செய்யப்பட்டது. அந்த மாவட்டத்தில் இன்று 20 பேர் இறந்துள்ளனர். கோவையி்ல் 793 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 25 பேர் இறந்துள்ளனர். சேலத்தில் 472 பேருக்கும் (சாவு 8), திருப்பூரில் 419 பேருக்கும் (சாவு8), தஞ்சையில் 338பேருக்கும்(சாவு 3) இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
வேலூரில் 74 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 15 பேர் இறந்துள்ளனர். மற்ற மாவட்டங்களில் இன்று இறப்பு ஒன்றைப்படை எண்ணுக்குள் இருந்தது ஆறுதல்.
நெல்லை
நெல்லையில் 41 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மரணம் இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தி்ல் 85 பேர் பாதிக்கப்பட்டாலம் இன்று இறப்பு இல்லை.