May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5,755 பேராக குறைந்தது

1 min read

In Tamil Nadu, the incidence of corona has come down to 5,755

25.6.2021
தமிழகத்தில் 5,755 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 150 பேர் இறந்துள்ளனர்.

குறைந்தது

தமிழகத்தில் கடந்த 35 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 44 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழக கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று 5,755 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,55,332 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 3,297 பேர் ஆண்கள், 2,458 பேர் பெண்கள்.
இன்று 8,132 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,75,963 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தமிழகத்தில் 150 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,051 ஆக அதிகரித்து உள்ளது.

கோவையில் 698 பேருக்கும், சென்னையில் 350 பேருக்கும், ஈரோட்டில் 597 பேருக்கும், சேலத்தில் 398 பேருக்கும், திருப்பூரில் 361 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இன்று 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளார். தென்காசியில் இன்று 45 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இறப்பு இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் 70 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.