தமிழகத்தில் கொரோனா 5,415 பேராக குறைந்தது ; 148 பேர் சாவு
1 min readCorona in Tamil Nadu fell to 5,415; 148 deaths
26.6.2021
தமிழகத்தில் இன்று 5,415 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கடந்த 36 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 45 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் இன்று 5,415 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,60,747 ஆக அதிகரித்து உள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில் 3,069 பேர் ஆண்கள், 2,346 பேர் பெண்கள். இன்று 7,661 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,83,624 ஆக உயர்ந்துள்ளது.
148 பேர் சாவு
இன்று 148 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,199 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நெல்லை
கோவையில் 671 பேருக்கும், ஈரோட்டில் 574 பேருக்கும், சேலத்தில் 369 பேருக்கும், சென்னையில் 314 பேருக்கும், தஞ்சையில் 260 பேருக்கும் திருப்பூரில் 337 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
நெல்லை இன்று 47 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அந்த மாவட்டத்தில் இன்று 2 பேர் இறந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தி 58 பேர் பாதிக்கப்பட்ட நிலைியல் 2 பேர் இறந்துள்ளனர்.