April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் கடந்த 102 நாட்களுக்குப்பின் கொரோனா 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

1 min read

The corona has dropped below 40,000 in the last 102 days in India

29.6.2021

இந்தியாவில் கடந்த 102 நாட்களுக்குப்பின் 40 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு குறைந்தது. அதாவது இந்தியாவில் புதிதாக 37,566 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா 2-வது அலை

கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பு பல நாட்கள் 4 லட்சத்தை தாண்டியது. தற்போது ஊரடங்கு, பொதுமுடக்கம், கட்டுப்பாடுகளால் 2-வது அலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

நேற்று முன்தினம் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 46,148 ஆக உயர்ந்திருந்தது. மேலும் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதிக்கு பிறகு முதல் முறையாக நேற்று 1000-க்கு கீழ் கொரோனா உயிரிழப்புகள் பதிவானது.

நாடு முழுவதும் கொரோனா நிலவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

37,566 பேர்

இந்தியாவில் நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதக 37 ஆயிரத்து 566 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,03,16,897 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 907 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,97,637 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 56,994 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,93,66,601 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 5,52,659 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்கண்ட தகவல்களை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.