இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு; 45,951 பேர் பாதிப்பு- 817 பேர் சாவு
1 min readIncrease in corona infection in India; 45,951 casualties – 817 deaths
31/6/2021
இந்தியாவில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து உள்ளது. இன்று காலை புதிதாக 45,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளனர். அதே நேரம் குணமடைவோர் விகிதம் 96.92 ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனா குறைவு
கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பு பல நாட்கள் 4 லட்சத்தை தாண்டியது. தற்போது ஊரடங்கு, பொதுமுடக்கம், கட்டுப்பாடுகளால் 2-வது அலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 37,566 ஆக பதிவாகி இருந்தது. ஆனால் நேற்றைய பதிவு அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதக 45,951 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,03,62,848 ஆக அதிகரித்துள்ளது.
817 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 817 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,98,454 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 60,729 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,94,27,330 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 96.92 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 5,37,064 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 33 கோடியே 28 லட்சத்து 54 ஆயிரத்து 527 ஆக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது