Corona for 31,443 people in a single day in India; 2,020 deaths
13.7.2021
இந்தியாவில் ஒரே நாளில் 31,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,020 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரேனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 31 ஆயிரத்து 443 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 09 லட்சத்து 07 ஆயிரத்து 282 ஆக உள்ளது.2
கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 2,020 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,10,784 ஆக உயர்ந்து உள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.32 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 49,007 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 00 லட்சத்து 63 ஆயிரத்து 720 ஆக உயர்வடைந்து உள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.28 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது வரை 4,31,315 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.40 சதவீதமாக உள்ளது.
நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38 கோடியே 14 லட்சத்து 67 ஆயிரத்து 646 ஆக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.