தமிழகத்தில் இன்று 1,808 பேருக்கு கொரோனா; 22 பேர் சாவு
1 min readCorona for 1,808 people in Tamil Nadu today; 22 deaths
25.7.2021
தமிழகத்தில் கடந்த 60 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் 74 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக இன்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 1,808 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,48,497 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,046 பேர் ஆண்கள், 762 பேர் பெண்கள்.
தமிழகத்தில் 2,447 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,91,222 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 22 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்ந்து கொரோனா காரணமாக இதுவரை இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33,911 ஆக அதிகரித்து உள்ளது.
நெல்லை
கோவையில் 169 பேருக்கும், ஈரோட்டில் 130 பேருக்கும் சென்னையில் 126 பேருக்கும்,செங்கல்பட்டில் 99 பேருக்கும், சேலத்தில் 105 பேருக்கும்,தஞ்சையில் 98 பேருக்கும், திருப்பூரில் 93 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 27 பேருக்கும், தென்காசியில் 11 பேருக்கும், தூத்துக்குடியில் 21 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டது. இந்த மூன்று மாவட்டங்களில் இன்று உயிரிழப்பு இல்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.