தமிழகத்தில் இன்று 1,785 பேருக்கு கொரோனா; பேர் சாவு
1 min readCorona for 1,785 people in Tamil Nadu today; 26 deaths
26/7/2021
தமிழகத்தில் இன்று புதிதாக 1,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 26 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த மாத இறுதியில் இருந்து தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாற:-
தமிழகத்தில் இன்று புதிதாக 1,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,50,282 ஆக அதிகரித்துள்ளது.
26 பேர் சாவு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,937 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 2,361 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,93,583 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 22,762 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 164 பேருக்கும், ஈரோட்டில் 127 பேருக்கும், சேலத்தில்102 பேருக்கும், தஞ்சையில் 103 பேருக்கும், திருப்பூரில் 90 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 37 ஆயிரத்து 292 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நெல்லை
நெல்லை இன்று 24 பேருக்கும், தூத்துக்குடியில் 19 பேருக்கும், தென்காசியில் 27 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உ்ள்ளனர். நெல்லை, தூத்துக்குடியில் இன்று தலா ஒருவர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.