இந்தியாவில் 3 ஆண்டுகளில் 5,569 கைதிகள் உயிரிழப்பு
1 min read5,569 prisoners killed in India in 3 years
27.7.2021
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 5,569 கைதிகள் உயிரிழந்து உள்ளனர்.
கைதிகள் உயிரிழப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், போலீஸ் காவலில் இருக்கும் போது பலியான கைதிகள் குறித்த விவரங்களை கேட்ட எம்.பி.க்கு, மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் அளித்த பதிலில் தெரிவித்து உள்ளதாவது:-
கடந்த 2018 முதல் 2021ல் தற்போது வரை காவலில் இருந்த 5,569 கைதிகள் உயிரிழந்து உள்ளனர். அதில், நீதிமன்றக் காவலில் 5,221 பேரும், போலீஸ் காவலில் 348 பேரும் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக 2018 – 19 வரை 1,933 கைதிகளும், 2019 – 20 வரை 1,696 கைதிகளும் 2020 முதல் தற்போது வரை 1,940 கைதிகளும் உயிரிழந்துள்ளனர்.
முதலிடம்
இந்த மூன்று ஆண்டுகளில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1,318 கைதிகள் உயிரிழந்துள்ளனர். அதில், போலீஸ் காவலில் 23 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 232 கைதிகள் உயிரிழந்து உள்ளனர். அதில், போலீஸ் காவலில் 25 பேர் பலியாகி உள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.