இந்தியாவில் கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு; 43,654 பேர் பாதிப்பு; 640 பேர் சாவு
1 min readincrease in corona exposure in India; 43,654 people affected; 640 casualties
28/7/2021
இந்தியாவில் கொரோனா பாதிப்பு திடீர் அதிகத்துள்ளது. ஒரு நாளில் 43,654 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளத. ஒரே நாளில 640 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா அதிகரிப்பு
இந்தியாவில் கரோனா தொற்று கடந்த 4 மாதங்களுக்குப் பின் கடந்த திங்கட்கிழமை 30 ஆயிரத்துக்கும் கீழே குறைந்திருந்த நிலையில், இன்று காலையில் 43 ஆயிரத்து 654 ஆக திடீரென அதிகரித்துள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் அளவில் 50 சதவீதத்துக்கும் மேல் கேரளா, மராட்டிய மாநிலத்தில்தான் இருக்கின்றனர். இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் மட்டும் 22 ஆயிரம் பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 120 நாட்களுக்குப் பின் கொரோனா தினசரி தொற்று நேற்று 30 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த நிலையில், ஒரே நாளில் 47 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
43,654 பேர் பாதிப்பு
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிகாக 43 ஆயிரத்து 654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 84 ஆயிரத்து 605 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 99 ஆயிரத்து 64 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 1,336 பேர் அதிகரித்துள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில், 1.27 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனாவில் இருந்து இதுவரை 3 கோடியே 6 லட்சத்து 63 ஆயிரத்து 147 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.39 ஆக அதிகரித்துள்ளது
640 பேர் சாவு
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 640 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 22 ஆயிரத்து 22 ஆக அதிகரித்துள்ளது. இதில் மராட்டிய மாநிலத்தில் 254 பேரும், கேரளாவில் 156 பேரும், ஒடிசாவில் 60 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.