May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 41,831 பேருக்கு கொரோனா; 541 பேர் சாவு

1 min read

Corona for a further 41,831 in India; 541 deaths

1.8.2021
இந்தியாவில் மேலும் 41,831 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா நிலவரம் பற்றி ஒன்றிய சுகாதார அமைச்சம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 41,831 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 16 லட்சத்து 55 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 39,258 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 08 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 4.10 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று 541 பேர் கொரோனா தொற்றுக்கு பலியானார்கள்; இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 4,24,351 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.36 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.34 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.30 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தடுப்பூசி

இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 1) காலை 8 மணி நிலவரப்படி 47.02 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 60,15,842 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலக பாதிப்பு


இன்று (ஆகஸ்ட் 1-ம் தேதி) காலை 10 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 19 கோடியே 85 லட்சத்து 57 ஆயிரத்து 259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 லட்சத்து 33 ஆயிரத்து 071 பேர் பலியாகினர். 17 கோடியே 92 லட்சத்து 95 ஆயிரத்து 578 பேர் மீண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.