தமிழகத்தில் இன்று 1551 பேருக்கு கொரோனா; 21 பேர் சாவு
1 min readCorona for 1551 people in Tamil Nadu today; 21 deaths
27.8.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,542 -ல் இருந்து 1,551 ஆக சற்று உயர்ந்தது. 21 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,768 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழக கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,63,230 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில்,1,551 பேருக்கு இன்று உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,10,299 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 872 பேர் ஆண்கள், 679 பேர் பெண்கள். இன்று 1,768 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,57,884 ஆக உயர்ந்துள்ளது.
21 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 21 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,856 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக இருந்த நிலையில் இன்று (28ம் தேதி) 182 ஆக அதிகரித்துள்ளது.
கோவை
கோவையில் 230 பேருக்கும், செங்கல்பட்டில் 122 பேருக்கும், ஈரோட்டில் 112 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 12 பேரும், தென்காசியில் 10 பேரும், தூத்துக்குடயில் 7 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.