May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

கேரளாவில் நாளை முழு ஊரடங்கு

1 min read

Full curfew in Kerala tomorrow

28.8.2021

கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால் கேரளாவில் நேற்று முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுகிறது.

கேரளாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம்ஊரடங்கு அமலானது. கொரோனா 2வது அலையில் முதல் அலையை விட அதிக பாதிப்புகள் காணப்பட்டன. இந்நிலையில், தொற்று எண்ணிக்கை சமீப நாட்களாக குறைந்து காணப்படுகிறது.
எனினும், கேரளாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பினராயி விஜயன் தலைமையிலான அரசு, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியது. அதன்பிறகு ஒரு மாதத்திற்கு ஞாயிறு மட்டும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. எனினும், அத்தியாவசிய கடைகள் திறக்கவும், வாகனங்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டன.

இந்த சூழலில், சுதந்திர தினம், ஓணம் பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இது கொரோனா பரவலுக்கு வழிவகுத்தது. இதனை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கை அமல்படுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, அத்தியாவசிய தேவையின்றி இயங்கும் வாகனங்கள், வெளியே சுற்றி திரிபவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.