இந்தியாவில் புதிதாக 41,965 பேருக்கு கொரோனா; 460 பேர் சாவு
1 min readCorona for 41,965 newcomers in India; 460 deaths
1.9.2021
இந்தியாவில் புதிதாக 41,965 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 460 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 965 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,28,10,845 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 460 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,39,020 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34 ஆக உள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 33,964 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,19,93,644 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.53 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,78,181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.13 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 65,41,13,508 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.