கர்நாடகாவில் ஒரே கல்லூரியில் 32 மாணவிகளுக்கு கொரோனா
1 min readCorona for 32 students in a single college in Karnataka
1.9.2021
கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள ஒரு கல்லூரியில் 32 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கல்லூரிகள்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக, கேரளாவில் வைரஸ் பரவல் தொடர்ந்து உச்சமடைந்து வருகிறது.
இதற்கிடையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள நர்சிங் கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்ட நர்சிங் கல்லூரியில் பயின்று வரும் 32 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட அனைவரும் கேரளாவில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவுடனான எல்லையாக உள்ள கர்நாடகாவின் கோலார் மாவட்டத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான கேரள மக்கள் வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வருகை தருகின்றனர். இதனால், கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனையடுத்து, கேரளாவில் இருந்து கர்நாடகா வரும் அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும் என கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது. இதற்கிடையில், கேரளாவை சேர்ந்த நர்சிங் மாணவிகள் 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நர்சிங் கல்லூரியை கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேரில் பார்வையிட உள்ளார்.