May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாளில் 9 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை

1 min read

Public holiday for 9 districts on the day of rural local elections

28.9.2021

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வரும் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் பொது விடுமுறை விடப்படுவதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தெரிவித்துள்ளது.

ஊரக ஊராட்சி தேர்தல்

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9-ம் தேதியும் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 28 மாவட்ட தற்செயல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வரும் 9 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக ஊரக உள்ளாட்சி துறை அறிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.