May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 18,870 பேருக்கு கொரோனா; 378 பேர் பலி

1 min read

Corona for 18,870 newcomers in India; 378 killed

29/9/2021

இந்தியாவில் புதிதாக 18,870 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஒரே நாளில் 378 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இதன்படி கடந்த திங்கட்கிழமை 26,041 பேருக்கும், செவ்வாய்க்கிழமை 18,795 பேருக்கும் வைரஸ் பாதிப்புகள் பதிவானது. இந்த நிலையில், இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,870 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18 ஆயிரத்து 870 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 11,196 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,37,16,451 ஆக அதிகரித்துள்ளது.

378 பேர் சாவு

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 378 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,47,751 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 28,178 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,29,86,180 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 2,82,520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 87,66,63,490 பேருக்கு ( இன்று காவலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 54,13,332 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 15,04,713 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 56,74,50,185 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.