தமிழகத்தில் 1,467 பேருக்கு கொரோனா; 16 பேர் சாவு
1 min readCorona for 1,467 people in Tamil Nadu; 16 deaths
4.10.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,531 -ல் இருந்து 1,467ஆக சற்று குறைந்துள்ளது. 16 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,559 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,48,749 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தை சேர்ந்த 1,466 பேருக்கும் கத்தார் நாட்டிலிருந்து வந்த ஒருவர் உள்பட 1,467 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,69,962 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,75,98,685 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 883 பேர் ஆண்கள், 584 பேர் பெண்கள். இன்று 1,559 பேர் கொரேனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,17,432 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 16 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 6 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 10 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,666 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
கோவையில்இன்று 155 பேருக்கும், செங்கல்பட்டில் 103 பேருக்கும், தஞ்சையில் 90 பேருக்கும், ஈரோட்டில் 88 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 19 பேருக்கும், தென்காசியில் 2 பேருக்கும், தூத்துக்குடியில் 17 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. தூத்துக்கடியில் இன்று ஒருவர் இறந்துள்ளார்.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக இருந்த நிலையில் இன்று (அக்.4ம் தேதி) 181ஆக குறைந்துள்ளது.
கேரளா
கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 8,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.