May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,127 பேருக்கு கொரோனா; 15 பேர் சாவு

1 min read

Corona for 1,127 people in Tamil Nadu today; 15 deaths

24.10.2021
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,140 ல் இருந்து 1,127 ஆக சற்று குறைந்துள்ளது. 15 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,358 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,24,177 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,95,216 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 628 பேர் ஆண்கள், 499 பேர் பெண்கள். இன்று 1,358 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,46,163 ஆக உயர்ந்துள்ளது.

15 பேர் சாவு

தமிழகத்ல் இன்று 15 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,019 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக இருந்த நிலையில் இன்று 146 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 128 பேருக்கும், செங்கல்பட்டில் 96 பேருக்கும், ஈரோட்டில் 70 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 5 பேருக்கும், தென்காசியல் 3 பேருக்கும், தூத்துக்குடியில் 9 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு இருக்கிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.