May 28, 2024

Seithi Saral

Tamil News Channel

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து : பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

1 min read

Firecracker factory accident near Srivilliputhur: Death toll rises to 5

1.1.2022
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் இறந்தனர்.

பட்டாசு ஆலை

ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை மெயின் ரோட்டில் உள்ள வடுகபட்டி பஞ்சாயத்து சேர்ந்தது நாகலாபுரம். இங்கு தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை சிவகாசி தாலுகா புதுப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்த வழிவிடு முருகன் (வயது 42 ) என்பவர் நடத்தி வருகிறார்.

இந்த பட்டாசு தொழிற்சாலை ஆரம்பித்து இரண்டு வருடம் ஆகின்றது. பட்டாசு தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர் .

புத்தாண்டையொட்டி 80 பேர் வேலை பார்த்து வந்தனர். இந்த பட்டாசு தொழிற்சாலையில் இருபத்தி மூன்று அறைகள் உள்ளன காலை 8.50 மணிக்கு கெமிக்கல் கலக்கும் அறையில் திடீரென மருந்து பொருட்களை கலக்கும் போது வெடி விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தம் கேட்டது.

அந்த அறை முழுவதும் தரைமட்டமானது. கெமிக்கல் கலக்கும் கட்டிடத்தில் மொத்தம் ஏழு அறைகள் இருந்தன இந்த அறையில் 20 பேர் பணியாற்றி வந்தனர்.

விபத்து

பட்டாசு கெமிக்கல் கலக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து அந்த அறை முழுவதும் தரைமட்டமானது. தொடர்ந்து அருகில் இருந்த அறைகளில் இருந்து வேலை பார்த்தவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என உயிர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடினார்கள்.

இதுகுறித்து போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்
சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் வத்திராயிருப்பு எரிச்சநத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறை வாகனங்கள் அணைத்தனர்.

மீட்பு பணியின் போது மூன்று உடல்கள் எடுக்கப்பட்டது. இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்த 8 பேர் படுகாயத்துடன் சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

மேலும் ஒரு உடல் தேடும் பணி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்ற ஒருவரும் பலியானார் மேலும் மீட்பு பணி நடைபெறும் போது 11 மணி அளவில் மழை பெய்ததால் மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது அதன் பிறகு மீட்பு பணி தொடர்ந்தது.

பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.