May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 70 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

1 min read

70 more people in India affected by omega

19.1.2022

இந்தியாவில் மேலும் 70 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 961 ஆக அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான்

கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி டெல்டா, டெல்டா பிளஸ் என வகைகளில் பரவி வந்தது. தற்போது கொரோனா மேலும் உருமாறி ஒமைக்ரான் என்ற பெயரில் உலகை அச்சுறுத்தி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த ஒமைக்ரான் கண்டறியப்பட்டது. தற்போது, இந்தியாவிலும் இந்த ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 70 பேருக்கு புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இது நேற்றை பாதிப்பில் இருந்து 0.79 சதவிகிதம் அதிகமாகும்.

இதனால், இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 961 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.