May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2.82 லட்சமாக அதிகரிப்பு

1 min read

Daily corona exposure in India increased to 2.82 lakh

19.1.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 2.38 லட்சம் பேருக்கு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று காலையில் 2.82 லட்சமாக தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்றைய பாதிப்பான 2 லட்சத்து 38 ஆயிரத்து 18 மற்றும் திங்கட்கிழமை பாதிப்பான 2 லட்சத்து 58 ஆயிரத்து 89 மற்றும் அதற்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன.16) பாதிப்பான 2 லட்சத்து 71 ஆயிரத்து 202-ஐ விட அதிகமாகும்.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 78 லட்சத்து 1 ஆயிரத்து 241 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 88 ஆயிரத்து 157 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 55 லட்சத்து 83 ஆயிரத்து 39 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 18 லட்சத்து 31 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

441 பேர் சாவு

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 441 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 87 ஆயிரத்து 202 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 158 கோடியே 88 லட்சத்து 47 ஆயிரத்து 554 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.